செய்திகள்
கொலை

தருமபுரி அருகே வாலிபர் அடித்து கொலை?

Published On 2020-01-24 16:33 GMT   |   Update On 2020-01-24 17:12 GMT
தருமபுரி அருகே வீட்டில் மர்மமான முறையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி

தருமபுரியை அடுத்துள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராஜேந்திரன். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரன் தாளநத்தம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் குள்ளனூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு நேற்றுமுன்தினம் இரவு அறையில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்றுமதியம் வரை ராஜேந்திரன் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சத்தம் எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அறையில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் சாவில் மர்மம் இருப்பதால் அவரை அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News