செய்திகள்
தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மோகன் என்ற மோகன் ராஜ்(வயது 41). பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி வடபாகம், தாளமுத்து நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் மோகன் அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளி ஒருவரை கொலை செய்ய போவதாக கூறிவந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோகனை கைது செய்ய சென்றனர். உடனே போலீஸ் வருவதை பார்த்த மோகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு சுவரின் மீது ஏறிய மோகன் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.