செய்திகள்
பணம் கொள்ளை

ராயப்பேட்டையில் நகைக்கடை அதிபரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி

Published On 2020-01-24 10:34 GMT   |   Update On 2020-01-24 10:34 GMT
ராயப்பேட்டையில் நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிரவீண்குமார். தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நில புரோக்கர் முகமது என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக அணுகினார்.

நிலம் குறித்த தகவல்களை தெரிவித்த அவர் ரூ.40 லட்சம் ரொக்கத்துடன் ராயப்பேட்டை சிவசைலம் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு வரும்படி கூறினார்.

அதன்படி பிரவீண்குமார் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். அந்த வீட்டில் இருந்த முகமதுவும், அவரது கூட்டாளி அகமதுவும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சத்தை பறித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் பிரவீண் குமார் புகார் கொடுத்தார். உதவி கமி‌ஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய நில புரோக்கர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News