செய்திகள்
தற்கொலை

விளாங்குறிச்சி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-01-24 10:20 GMT   |   Update On 2020-01-24 10:20 GMT
விளாங்குறிச்சி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை விளாங்குறிச்சி முருகன் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 43). டிரைவர். இவரது மனைவி சுசீலா (39). கீரணநத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பாபு கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை மனைவியை மோட்டார் சைக்கிளில் கம்பெனியில் இறக்கி விட்டார். மகனை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். வீடு திரும்பிய பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News