செய்திகள்
தற்கொலை

மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-24 10:18 GMT   |   Update On 2020-01-24 10:18 GMT
கோவையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த மனைவி போலீசில் புகார் செய்தார். இதனால் வருத்தம் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை ராமநாதபுரம் பசும்பொன் வீதியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது34). இவர் கம்ப்யூட்டர் சேல்ஸ் சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வருகிறார். பகுதி நேரமாக டிரைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் சுடலை முத்துவுக்கும், அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து சுடலைமுத்து மனைவி அவர் மீது ராமநாதபுரம் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் அழைத்து விசாரித்து வழக்கை முடித்து வைத்தனர். இதன் காரணமாக சுடலைமுத்து மன வருத்தத்துடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் உமர்பரூக்(45). ரெயில்வே கூலித்தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த உமர்பரூக் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News