செய்திகள்
தற்கொலை

கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2020-01-18 10:35 GMT   |   Update On 2020-01-18 10:35 GMT
கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள பாதிரி மேட்டு காலனி தெருவில் வசிப்பவர் மருதமுத்து மனைவி சாரதாம்பாள், (வயது 65) விவசாய கூலி. நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிக்கு வைத்திருந்த வி‌ஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி விட்டார். இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News