செய்திகள்
கைது

உடன்குடி அருகே டாஸ்மாக் பாரை உடைத்து திருடிய வாலிபர்கள் கைது

Published On 2020-01-18 09:14 GMT   |   Update On 2020-01-18 09:14 GMT
உடன்குடி அருகே டாஸ்மாக் பாரை உடைத்து திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடி;

உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் மதன்ராஜ்(வயது 35). இவர் உடன்குடி பஸ்நிலையம் அருகே பார் நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ந்தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் 10-ந்தேதி காலை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.5000 பணம் காணாமல் போயிருந்தது. உடனே இதுகுறித்து மதன்ராஜ் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் உடன்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் சவுந்தர்(22), உடன்குடி வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த ஆண்டி மகன் ஈஸ்வரமூர்த்தி(22), காயாமொழி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் யாக்கோபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News