செய்திகள்
கைது

ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது

Published On 2020-01-18 08:29 GMT   |   Update On 2020-01-18 08:29 GMT
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது38). இவரது மனைவி பவித்ரா (30). சம்பவத்தன்று வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கரும்புதட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

குன்னூர் ஊரணி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (30). சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரை வழி மறித்த ராம்குமார், ராஜபிரபு, முத்துபிரவீன் ஆகியோர் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து க.விலக்கு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News