செய்திகள்
கைது

கிருஷ்ணாபுரம்: கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2020-01-14 15:03 GMT   |   Update On 2020-01-14 15:03 GMT
கிருஷ்ணாபுரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற முதியவரை கைது செய்தனர்.
தர்மபுரி:

கிருஷ்ணாபுரம் போலீசார் குற்ற தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவின்கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரவாடி அடுத்துள்ள கதிர்நாயக்கனஅள்ளி அருகே கஞ்சாவை ஒருவர் பொட்டலமாக மடித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அதேபகுதியை சேர்ந்த கபலையன் (வயது 69) என தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபலையனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலீசார் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News