செய்திகள்
தற்கொலை

இண்டூர் அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2020-01-10 13:57 GMT   |   Update On 2020-01-10 13:57 GMT
இண்டூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இண்டூர்:

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்துள்ள அதகபாடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்டர். இவரது மனைவி மீனா (வயது27). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் நேற்று இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மீனா வீட்டில் இரவு தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த மீனாவின் உடலை கைப்பற்றினர். 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News