செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டு முன்பு 4 மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு

Published On 2020-01-09 11:37 GMT   |   Update On 2020-01-09 11:37 GMT
தி.மு.க. கவுன்சிலர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் பரமக்குடி ஒன்றியத் துக்குட்பட்ட 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு கலைச்செல்வி வீட்டு முன்பு அவரது உறவினர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கலைச்செல்வி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கோபாலகிருஷ்ணன், செந்தில் என்பவரின் 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பியது. இதில் 4 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பார்த்திபனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப்பதிவு செய்து தேர்தல் முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News