செய்திகள்
விஷம்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் சாணிபவுடர் குடித்து தற்கொலை

Published On 2020-01-09 10:30 GMT   |   Update On 2020-01-09 10:30 GMT
கோவை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி சாந்தாமணி(வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாந்தாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல்(85). இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த பின்பு வடிவேல் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News