செய்திகள்
மரணம்

ஆண்டிப்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மர்ம மரணம்- மனைவி போலீசில் புகார்

Published On 2020-01-09 10:14 GMT   |   Update On 2020-01-09 10:14 GMT
ஆண்டிப்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 33). இவர் மீது தேனி, ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, பைக் திருட்டு உள்ளிட்ட 22 குற்ற வழக்குகள் உள்ளன.

தற்போது ஈஸ்வரன் குடும்பத்துடன் பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ஈஸ்வரன் மீண்டும் தலையில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை மனைவி லலிதா பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டதாக லலிதா ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News