செய்திகள்
விபத்துக்குள்ளான லாரி

தர்மபுரியில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2020-01-07 17:53 GMT   |   Update On 2020-01-07 17:53 GMT
ஏரிக்கரை அருகே பாரம் தாங்காமல் கரும்பு லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய ஒரு லாரி அரூர் கோபாலபுரத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரை அருகே வந்தபோது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்பு சாலையில் கொட்டியது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News