செய்திகள்
கைது

புதுக்குடியில் மது விற்றவர் கைது

Published On 2020-01-07 09:53 GMT   |   Update On 2020-01-07 09:53 GMT
புதுக்குடியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடியில் நேற்று செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் புதுக்குடியில் இருந்து கீழதிருவிழாப்பட்டி செல்லும் சாலையில் சென்று கண்காணித்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் புதுக்குடி தெற்கு தெருவை சேர்ந்த சேகர்(49) என தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News