செய்திகள்
ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகந்தி(வயது24).
இவருக்கும் மன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமம் ஆசை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒக்கநாடு கீழையூரில்உள்ள தனது தாய் வீட்டுக்கு சுகந்தி வந்தார். கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து ஒரத்தநாடு போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகந்தியை தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகந்தி(வயது24).
இவருக்கும் மன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமம் ஆசை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒக்கநாடு கீழையூரில்உள்ள தனது தாய் வீட்டுக்கு சுகந்தி வந்தார். கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து ஒரத்தநாடு போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகந்தியை தேடி வருகின்றனர்.