பல்லடத்தில் தூக்குப்போட்டு பனியன் தொழிலாளி தற்கொலை
பல்லடம்:
தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு (வயது 28). இவரது மனைவி கற்பகம். இவர்கள் பல்லடம் சின்னக்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து பனியன் கம்பெனிக்கு சென்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் சொந்த ஊருக்கு சென்றனர். கடந்த 2-ந் தேதி வள்ளிக்கண்ணு மட்டும் திரும்பினார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு உள் பக்கம்பூட்டியிருந்தது. தூர்நாற்றமும் வீசியது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் மணி ஜன்னல் வழியே பார்த்தபோது வள்ளிக்கண்ணு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வள்ளிக்கண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.