செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்

திருப்பூரில் ஒரேநாளில் போக்குவரத்து விதிமீறிய 305 பேர் மீது வழக்கு

Published On 2019-12-31 10:03 GMT   |   Update On 2019-12-31 10:03 GMT
திருப்பூரில் ஒரேநாளில் போக்குவரத்து விதிமீறிய 305 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.22 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

அதன்படி 8 போலீஸ் நிலையங்கள் மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற 111 பேர் மீதும், பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 100 பேர் மீதும் என 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதுபோல் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 13 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 11 பேர் மீதும் உள்பட மொத்தம் 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.22 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News