செய்திகள்
ஜஸ்வின் -அர்ஷித்

மன்னார்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு அண்ணன்-தம்பி பலி

Published On 2019-12-29 13:40 GMT   |   Update On 2019-12-29 13:40 GMT
மன்னார்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி நிசாந்தினி. இவர்களுக்கு ஜஸ்வின் (வயது4), அர்ஷித் (2) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜஸ்வின் மற்றும் அர்ஷித் ஆகியோர் அடுத்தடுத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிறுவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News