search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் தம்பி பலி"

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அண்ணன், தம்பி இருவரும் திடீரென தரை கிணற்றில் தவறி விழுந்தனர்.
    • ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி போலீஸ் சரகம் பிரமகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மகன்கள் தமிழ்மாறன் (வயது 10), மோகனபிரியன் (9). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படித்தனர். இவர்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள தரை கிணற்றின் ஓரம் காலை கடன் கழிக்க சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 2 பேரும் தரை கிணற்றில் தவறி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    இதனால் ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுகுறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். அவர்களை கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது 2 சிறுவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தினார்.

    ×