செய்திகள்
தற்கொலை

ஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-12-28 09:23 GMT   |   Update On 2019-12-28 09:23 GMT
ஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே 34 கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55) விவசாயி. இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் உடல் நலம் சரியாகாததால் சம்பவத்தன்று மனமுடைந்த கணேசன் வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் வேலாயுதம் கொடுத்த புகாரின் பெயரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News