செய்திகள்
இருகூர் அருகே ரெயில் மோதி ஆஸ்பத்திரி ஊழியர் பலி
கோவை இருகூர் அருகே ரெயில் மோதி உயிரிழந்தவர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிங்காநல்லூர்:
கோவை இருகூர் பைபாஸ் பாலத்தின் கீழ் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் இருகூர் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் ரமேஷ் (வயது 50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை இருகூர் பைபாஸ் பாலத்தின் கீழ் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் இருகூர் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் ரமேஷ் (வயது 50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.