search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் மோதி விபத்து"

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 20). ராணுவ வீரர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று இரவு கோரந்தாங்கல் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் பாஸ்கரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிறிது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை திருத்தணி - அரக்கோணம் ரெயில் பாதையின் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 57 வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது இறந்து கிடந்த வர் தணிகைபோளூர் பகுதியை சேர்ந்த சேகர் ( வயது 57 ) என்பதும், நேற்று காலை அந்த பகுதியில் சென்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

    ×