செய்திகள்
மரணம்

ஆத்தூர் அருகே தீக்குளித்த வாலிபர் பலி

Published On 2019-12-26 11:20 GMT   |   Update On 2019-12-26 11:20 GMT
ஆத்தூர் அருகே தீக்குளித்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள தலைபண்ணையூரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது 2-வது மகன் மதன். இவருக்கு பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்த பால் மகள் முத்து ரஞ்சிதம்(வயது 20) என்பவருடன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்து ரஞ்சிதம் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கூலித்தொழிலாளியான மதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்துள்ளார். இதனை மதனின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மதன் கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

படுகாயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

Tags:    

Similar News