செய்திகள்
திருப்பூரில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
திருப்பூரில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையம் சேர்ந்தவர் கலாவதி (57) இவர் சம்பவத்தன்று தென்னம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கலாவதி திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலை வைத்து துப்பு துலக்கினார்கள். இதில் திருப்பூர் ராயபுரத்தில் சேர்ந்த காதர் பாஷா (19) கோவை சிங்காநல்லூர் சேர்ந்த வல்லரசு (19) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.