செய்திகள்
மதுரை ஆதீனம்

கிறிஸ்துமஸ் பண்டிகை - மதுரை ஆதீனம் வாழ்த்து

Published On 2019-12-24 09:15 GMT   |   Update On 2019-12-24 09:15 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மெழுகுவர்த்தி எவ்வாறு தன்னை உருக்கி, அழித்து பிறருக்கு ஒளியை தருகின்றதோ, அதே போல ஏசு கிறிஸ்து தன்னையே உருக்கி அழித்து உலக மக்களுக்கு ஒளியை ஊட்டினார்.

நோயில் துன்பப்படுவோர், ஏழை-எளியோர், வறுமை மிக்கோர், உழைக்கும் வர்க்கத்தோர் இவர்கள் மீது உண்மையான அன்பையும், கருணை செயலையும் காட்ட வேண்டும் என்றும், இறைவன் எல்லா மக்களுக்கும் ஒருவனே இருக்கின்றான். எனவே சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியவர் ஏசுபிரான்.

அவர் பிறந்தநாளை கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மத, சாதி நல்லிணக்கம் பேணிக்காப்போர் அனைவருக்கும் ஆசீர்வாதம் உரித்தாக்கம் செய்கிறோம்.

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News