அரியாங்குப்பத்தில் மனைவி மீது ஆசிட் வீசீய கணவர்
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (டிரைவர்). இவரது மனைவி நித்யா (வயது38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன்-மணைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிகிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். இருந்தாலும் கோபத்தில் இருந்த சந்தனகுமார் தூங்கி கொண்டிருந்த மனைவி மீது ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றினார்.
இதில் நித்யாவுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.