உத்தமபாளையம் அருகே துக்க நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்
தேனி:
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது ஓட்டல் அருகே உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கினார். அப்போது அங்கிருந்த பிரபு என்பவர் எச்சில் துப்பியுள்ளார். இதனை முருகன் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் முருகனின் உறவினர் ராஜா என்பவரை பிரபு மற்றும் அவரது தரப்பினர் மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த நாகேந்திரன், முருகன் உள்பட 3 பேரையும் கம்பால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த 3 பேரும் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் பிரபு உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.