செய்திகள்
திண்டுக்கல் கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்
திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்தில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற அலுவலக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து நேற்று மாலை ஒரு பெண் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் பிரியா (வயது 24) என தெரியவந்தது.
திருமணமான இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கணவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கோர்ட்டு மாடியில் இருந்து எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என தெரியவில்லை. பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.