செய்திகள்
கைது

மத்தூரில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- கூலி தொழிலாளி கைது

Published On 2019-12-16 10:11 GMT   |   Update On 2019-12-16 10:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தருமதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவர். சிறுமி கடந்த 9-ந்தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுந்தரம் வீடு புகுந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சுந்தரத்தை கைது செய்தனர்.

மேலும் விசாரணைக்காக போலீசார் சுந்தரத்தை பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News