செய்திகள்
விபத்து

ஒரத்தநாடு அருகே அரசு பஸ் மோதி ஒட்டல் உரிமையாளர் காயம்

Published On 2019-12-12 12:11 GMT   |   Update On 2019-12-12 12:11 GMT
ஒரத்தநாடு அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் ஒட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது45). இவர் ஒரத்தநாட்டில் ஒட்டல் வைத்துள்ளார். இன்று காலை ஒட்டலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள்மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்வராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News