செய்திகள்
சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி
சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்:
கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர அரசு பஸ் (தடம் எண்.153ஏ) இன்று காலை புறப்பட்டது.
பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா பள்ளிகுலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி (41) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.
காலை 8.30 மணி அளவில் மணவாள நகர் என்ற பகுதியில் வரும் போது டிரைவர் சின்னத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.
ஒரு ஆட்டோ பிடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை நிறுத்திவிட்டு அவர் மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினார்கள். டிரைவரின் முன்எச்சரிக்கை நடவடிக்கையை பயணிகள் பாராட்டினார்கள்.
கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர அரசு பஸ் (தடம் எண்.153ஏ) இன்று காலை புறப்பட்டது.
பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா பள்ளிகுலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி (41) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.
காலை 8.30 மணி அளவில் மணவாள நகர் என்ற பகுதியில் வரும் போது டிரைவர் சின்னத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.
ஒரு ஆட்டோ பிடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை நிறுத்திவிட்டு அவர் மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினார்கள். டிரைவரின் முன்எச்சரிக்கை நடவடிக்கையை பயணிகள் பாராட்டினார்கள்.