செய்திகள்
திருமங்கலம் ரெயில் நிலையம்

திருமங்கலத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தந்தை-மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Published On 2019-12-11 12:24 GMT   |   Update On 2019-12-11 12:24 GMT
திருமங்கலத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தந்தை மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் (75) அவருடைய மகள் உதயராணி (55). இருவரும் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கள்ளிக்குடி வருவதற்காக ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.

திருமங்கலம் ரெயில் நிலையம் வந்தவுடன் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர்.

இறங்குவதற்குள் ரெயில் புறப்பட்டது. முதலில் இறங்கிய உதயராணி கையை அவருடைய தந்தை மாணிக்கம் பிடித்து இழுத்ததால் நடைமேடையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதனை பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதற்குள் உதயராணி தண்டவாளத்துக்குள் விழுந்துவிட்டார்.

மாணிக்கம் நடைமேடையில் விழுந்து காயமடைந்தார். இதனால் இருவரும் காயமடைந்தனர். அங்கிருந்த பயணிகள் இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News