செய்திகள்
கொடைக்கானலில் கடும் பனிமூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானலில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் பொழுதிலேயே எதிரில் வருபவர்கள் தெரியாத நிலை உள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சாலைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றன. மலைச்சாலையில் பனி மூட்டம் காரணமாக குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்க அறிவுறுத்தியுள்ளனர்.
மார்கழி மாதம் தொடங்கும் முன்பே பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பனி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் பொழுதிலேயே எதிரில் வருபவர்கள் தெரியாத நிலை உள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சாலைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றன. மலைச்சாலையில் பனி மூட்டம் காரணமாக குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்க அறிவுறுத்தியுள்ளனர்.
மார்கழி மாதம் தொடங்கும் முன்பே பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பனி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.