செய்திகள்
விஷம்

கோவையில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-12-11 10:01 GMT   |   Update On 2019-12-11 10:01 GMT
கோவை தடாகம் அருகே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை தடாகம் கணுவாயை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை மதுக்கரை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பத்மா (வயது 49). சம்பவத்தன்று இவர் வீட்டில் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் பத்மாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராமாபட்டினத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 55) தொழிலாளி. இவர் உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட செல்வன் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News