செய்திகள்
தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே அண்டாவை விற்று மது குடித்தவர் தற்கொலை

Published On 2019-12-11 09:31 GMT   |   Update On 2019-12-11 09:31 GMT
ஆண்டிப்பட்டி அருகே அண்டாவை விற்று மது குடித்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது55). இவரும் அவரது மனைவி பசுபதி என்பவரும் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செங்குந்தபுரம் பாறைப்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தனர்.

முருகேசன் அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த முருகேசன் மது குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் மீண்டும் எழுந்து வீட்டிற்கு வந்து அங்கிருந்த அண்டாவை அடகு வைத்து மது குடித்தார். மறுநாள் காலையில் அண்டாவை விற்ற விபரம் மனைவிக்கு தெரிந்தால் சத்தம்போடுவார் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி பசுபதி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News