செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே கிராம நிர்வாக அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-12-10 08:48 GMT   |   Update On 2019-12-10 08:48 GMT
கும்மிடிப்பூண்டி அருகே கிராம நிர்வாக அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கொள்ளானூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நிர்மல் (26). கண் பார்வையற்ற, மாற்றுத் திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குண்டூர் ஆகும்.

அவர் சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். அப்போது நான் பார்வையற்றவன். எனக்கு எதற்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை என்றும், எழுத படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் நிர்மல் தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை அவரது பெற்றோர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். மன வேதனையில் வீட்டில் தனியாக இருந்த நிர்மல் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News