செய்திகள்
அம்பேத்கர் சிலைக்கு அதிமுஅக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி

தர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2019-12-07 16:42 GMT   |   Update On 2019-12-07 16:42 GMT
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், ராமசாமி, மல்லன், கூட்டுறவு நூற்பாலை தலைவர் நடராஜன், நிர்வாகிகள் அதியமான், பூமணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி நகர தி.மு.க. சார்பில் கோல்டன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சந்திரமோகன், அன்பழகன், முல்லைவேந்தன், சுருளிராஜன், வாசுதேவன், ரவி, நிர்வாகிகள் உதயசந்திரன், மாதே‌‌ஷ், காசிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நகர தலைவர் செந்தில்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், வட்டார தலைவர்கள் சரவணன், காமராஜ், மாதே‌‌ஷ், மாவட்ட நிர்வாகிகள் கக்கன்ஜி, வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமதுரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி, நிர்வாகிகள் ஆறுமுகபாண்டி, வடிவேல், சுரே‌‌ஷ், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் கட்சி சார்பில் அரூர் கச்சேரி மேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நிறுவன தலைவர் இனமுரசு கோபால் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைசெயலாளர் ராஜேந்திரன், அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் லளிகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ராஜி, பிரதாபன், அபிமன்னன் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News