திருச்செந்தூரில் தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வேல்முருகன் (வயது 33), தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த கேசவன் (44) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதன்பேரில் ஆறுமுகநேரி, திருச்செந்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கேசவன், அவரது நண்பருடன் சேர்ந்து வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் கேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.