செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2019-12-05 11:29 GMT   |   Update On 2019-12-05 11:29 GMT
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (6-ந்தேதி ) நடத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (6-ந்தேதி ) நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பல முன்னணி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் தங்கள் சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றுகளுடன் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News