செய்திகள்
கொள்ளை

சோழவந்தானில் கடையின் ‌ஷட்டரை உடைத்து ரூ.80 ஆயிரம்-செல்போன்கள் கொள்ளை

Published On 2019-12-02 12:23 GMT   |   Update On 2019-12-02 12:23 GMT
கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் மார்க்கெட் பகுதியில் சதீஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் கடையை பூட்டிவிட்டு சதீஷ் வீட்டுக்குச் சென்று விட்டார்.

நள்ளிரவு நேரத்தில்அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம், 30 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினர். செல்போன்களின் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும்.

காலை கடையின் ‌ஷட்டர் திறந்திருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் உடனே கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். சதீஷ் விரைந்து வந்து பார்த்த போது பணம்-செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News