செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே கணவனுடன் தகராறில் இளம்பெண் துக்குபோட்டு தற்கொலை

Published On 2019-11-29 10:46 GMT   |   Update On 2019-11-29 10:46 GMT
வில்லியனூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பங்கூர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதுவை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு டோக்கன் போடும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீபகாலமாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் நேற்று இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று காலை அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தேவி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தேவிக்கு திருமணமாகி 4 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடபெற்று வருகிறது.

Tags:    

Similar News