செய்திகள்
கொடைக்கானலில் கணவர் செல்போனை பறித்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை
கொடைக்கானலில் ரொம்ப நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது கணவர் செல்போனை பறித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமம் குண்டுபட்டி. இந்த ஊரின் அருகே உள்ள சத்தியக்கறை பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது23). இவருக்கு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும் கடந்த 1½ வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜோசப்பிற்கு தன் தாயாரிடமிருந்து போன் வந்தது. அதில் அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பாண்டீஸ்வரி மொபைலை பிடிங்கி ஜோசப் பேச முற்பட்டார். கணவர் தன்னை பேச விடாமல் மொபைலை பிடிங்கியதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் பாண்டீஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாண்டீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் குண்டுபட்டி. இந்த ஊரின் அருகே உள்ள சத்தியக்கறை பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது23). இவருக்கு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும் கடந்த 1½ வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜோசப்பிற்கு தன் தாயாரிடமிருந்து போன் வந்தது. அதில் அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பாண்டீஸ்வரி மொபைலை பிடிங்கி ஜோசப் பேச முற்பட்டார். கணவர் தன்னை பேச விடாமல் மொபைலை பிடிங்கியதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் பாண்டீஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாண்டீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.