செய்திகள்
கொலை

திருமங்கலம் அருகே இளம்பெண் கொலையில் 5 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2019-11-26 11:33 GMT   |   Update On 2019-11-26 11:33 GMT
திருமங்கலம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சின்ன உலகாணியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகள் முத்துமாரி (வயது29). முதல் கணவரை பிரிந்த இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகருப்பன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து தனது தாய் வீடு அருகே வசித்து வந்தார். பெரிய கருப்பன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று முத்துமாரி சின்னஉலகாணியில் உள்ள காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். டி.எஸ்.பி. அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் முத்துமாரியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தார். அப்போது குறிப் பிட்ட எண்ணிற்கு முத்து மாரி அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் சின்னஉலகாணி பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News