செய்திகள்
தொழிலாளி பிணம்

மாரண்டஅள்ளி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் தொழிலாளி பிணம்

Published On 2019-11-25 16:02 GMT   |   Update On 2019-11-25 16:02 GMT
மாரண்டஅள்ளி அருகே இன்று காலை ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்துள்ள கோவிலூரான் கொட்டாய் அருகே ரெயில்வே தண்ட வாளத்தில் இன்று காலை 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து அவர்கள் ஓசூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர்களும் எங்களுக்கு யார் என்று தெரியவில்லை என்று கூறினர்.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓசூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News