செய்திகள்
கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது

Published On 2019-11-22 04:22 GMT   |   Update On 2019-11-22 04:22 GMT
திருவாரூர் அருகே சிறுமியை வளர்ப்பு தந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்:

திருவாரூரை அடுத்த இளங்கார்குடியை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 35), விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சின்னப்பா, சித்ரா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். சித்ரா ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். சின்னப்பாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சித்ராவுக்கு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2 மனைவிகளுடன் வாழ்ந்த போதிலும் சின்னப்பாவின் காமம் அடங்கவில்லை. அவர் 2-வது மனைவி சித்ராவுக்கு தெரியாமல் அவரது மூத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று சிறுமி, தாயின் 2-வது கணவரின் அத்துமீறலை தாங்கி கொண்டு இருந்துள்ளார். இதனை சாதகமாக்கி கொண்டு சின்னப்பா மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சின்னப்பா பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மனமுடைந்த சிறுமி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாள். அவளை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதில் உயிர் பிழைத்த சிறுமி தந்தையாக இருக்க வேண்டியவர் இப்படி செய்து விட்டாரே என்று மனம் குழுமினார்.

தவறு செய்த சின்னப்பாவுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே சரி என்று முடிவு செய்த அவர் திருவாரூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தாயின் 2-வது கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்தனர். பின்னர் அவர் திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயலில் அடைக்கப்பட்டார்.

தொழிலாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News