இருகூர் அருகே காதல் திருமணம் செய்த ஒர்க்ஷாப் உரிமையாளர் மர்ம மரணம்
சிங்காநல்லூர்:
கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 42). அதே பகுதியில் உள்ள பூங்கா நகரில் லேத் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்து விட்டார்.
மனைவி இறந்த விரக்தியில் முருகானந்தம் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் முருகானந்தம் முகத்தில் காயம் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர்களது உறவினர்கள் முருகானந் தத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் இது குறித்து விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில் சிலர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, முருகானந்தத்தின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பேரில் 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறாம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால் தான் முருகானந்தம் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்றனர்.