செய்திகள்
விவசாயி தற்கொலை

களக்காடு அருகே விவசாயி தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-11-21 09:58 GMT   |   Update On 2019-11-21 09:58 GMT
களக்காடு அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலக்காடுவெட்டி மேலத்தெருவை சேர்ந்த விவசாயி சிவன். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவன் சர்க்கரை நோய், பிர‌ஷர் நோயால் பாதிப்படைந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் குணமடையவில்லை.

இதையடுத்து மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் மகேஷ் கோபால் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News