உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் இடங்கள்- தாமோ அன்பரசன் அறிவிப்பு
சென்னை:
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்துமாவட்ட செயலாளர் த.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடைபெற உள்ள உள்ளாட்சிமன்ற தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், நகரமன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை மாவட்டக் கழகத்தில் இருந்து பெற்று தாம் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய முழு விவரங்களை அந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர்களில் கீழே குறிப் பிடப்பட்டுள்ள இடங்களில் வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழகம் அறி வித்துள்ள உரிய கட்டணத் துடன் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைக் கழகத்தின் அறிவுரைப்படி அச்சிடப்பட்ட விண்ணப்பபடிவங்களை குன்றத்தூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒன்றிய - நகர- பேரூர் கழக செயலாளரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
போட்டியிட விரும்பும் கழக தோழர்கள் விருப்ப விண்ணப்ப படிவத்தை வழங்கி அதற்கான ரசீதை உடன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
15-ந் தேதி:- குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபம், திருப்போரூர் டி.டி.கே. திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி எம்.கே.டி. திருமண மண்டபம்.
16-ந் தேதி:- மேடவாக்கம் குமரன் ஹால், தாம்பரம் கோன் கிருஷ்ணா மண்டபம், பல்லாவரம் ராஜேஸ்வரி திருமண மண்டபம், பம்மல் எல்.சி. மஹால், செங்கல்பட்டு நகராட்சி திருமண மண்டபம், மறைமலைநகர் டி.வி.வி.பி. திருமண மண்டபம், கவுரி வாக்கம் சங்கம் பார்ட்டி ஹால்.
17-ந் தேதி:- ஸ்ரீபெரும்புதூர் தேனாம்பாள் திருமண மண்டபம், திருக்கழுக்குன்றம் கன்னிமுத்து திருமண மண்டபம், குரோம்பேட்டை பாலாஜி திருமண மண்டபம், அனகாபுத்தூர் வி.ஆர்.பி. திருமணமண்டபம்.