செய்திகள்
ஆவடி அருகே ஏரியில் மணல் திருட்டு- 2 லாரிகள் பறிமுதல்
ஆவடி அருகே ஏரியில் இருந்து மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு 1 மணிக்கு முத்தாபுதுபேட்டை போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்த போது மாகரல் பகுதியில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்கள் ஆவடி மேட்டுத்தும்பூர் பகுதியை சேர்ந்த ரவி (41) முத்து (41) மாகரல் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (48) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.